Home One Line P1 பிகேஆர், ஜசெக, அமானா அன்வாரை பிரதமராக முன்மொழிந்துள்ளன!

பிகேஆர், ஜசெக, அமானா அன்வாரை பிரதமராக முன்மொழிந்துள்ளன!

857
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாயன்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நம்பிக்கைக் கூட்டணி மகாதீரை அழைத்ததாகவும், ஆனால், அதை  பிரதமர் நிராகரித்ததாகவும் அவர் கூறினார்.

“இதனால், நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு  நம்ப்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை  தீர்மானித்துள்ளது” என்று அவர் கூட்டணியின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தனக்கு கிடைத்த ஆதரவு எண்ணிக்கை குறித்து கேட்டதற்கு, அன்வார் இந்த விஷயத்தை கூறி அரண்மனைக்கு முரணாக செய்லபட விரும்பவில்லை என்றும், அதை மாமன்னரிடம் ஒப்படைப்பதாகவும் கூறினார்.