Home One Line P1 மலாய் ஆட்சியாளர்களை நாளை மாமன்னர் சந்திக்கிறார்!

மலாய் ஆட்சியாளர்களை நாளை மாமன்னர் சந்திக்கிறார்!

397
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் நாளை வெள்ளிக்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் சந்திக்க உள்ளனர் என்று டி ஸ்டார் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மாமன்னர் இந்த வார தொடக்கத்தில் இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்துள்ளார்.

கூடுதலாக, மக்களைவையில் யார் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்கிறார் என்பதை அறிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் சுருக்கமான சந்திப்புகளை நடத்தினார்.

#TamilSchoolmychoice

ஆயினும், இஸ்தானா நெகாராவின் உதவியாளர் ஒருவரின் கூற்றுபடி, கூட்டம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறியதாக அது குறிப்பிட்டுள்ளது.