Home One Line P2 கொவிட்-19: உலகம் இதுவரை கண்டிராத எல்லைக்குள் நுழைந்துள்ளது- உலக சுகாதார நிறுவனம்

கொவிட்-19: உலகம் இதுவரை கண்டிராத எல்லைக்குள் நுழைந்துள்ளது- உலக சுகாதார நிறுவனம்

645
0
SHARE
Ad

பெய்ஜிங்: கொடிய கொரொனாவைரஸுக்கு எதிரான போரில் உலகம் இதுவரையிலும் கண்டிராத எல்லைக்குள் நுழைந்துள்ளது என ஐநா உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இன்று செவ்வாயன்று (மார்ச் 3) சீனாவில் இந்த நோய்த்தொற்றுகள் வியத்தகு அளவில் குறைந்துவிட்ட போதிலும், அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

உலகளவில், இந்த வைரஸ் 3,100-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ள நிலையில் 90,000- க்கும் அதிகமானோர் இந்த கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தெளிவான மாற்றம் தோன்றியபோதும், சீனாவிற்கு வெளியே ஒன்பது மடங்கு அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த மாதத்தில் புதிய வழக்குகள் வீழ்ச்சியடைந்து வருவதால், மக்கள் தொகையை பெருமளவில் வீட்டினுள் வைத்திருக்க சீனா கடுமையான தனிமைப்படுத்தல்களையும், பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இத்தாலி நகரங்களை பூட்டியிருந்தாலும், பிற நாடுகள் பொது மக்களின் தனிமைப்படுத்தல்களைச் செய்வதை நிறுத்திவிட்டன. பெரிய கூட்டங்களில் கலந்து கொள்வதை தடுத்துள்ள நிலையில், விளையாட்டு நிகழ்ச்சிகளை தாமதப்படுத்தியும் உள்ளன. கொரொனாவைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளின் வருகையை தடையும் செய்துள்ளன.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் மத்திய சீன நகரமான வுஹானில் வனவிலங்குகளை விற்கும் சந்தையில் தோன்றியதாக நம்பப்படும் கொரொனாவைரஸ் தென் கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் வேகமாக பரவுகிறது.