Home One Line P1 நஜிப்பின் எஸ்ஆர்சி வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது!

நஜிப்பின் எஸ்ஆர்சி வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது!

448
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நஜிப் ரசாக்கின் 42 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் விசாரணையை வரும் திங்கட்கிழமையுடன் பாதுகாப்பு தரப்பு முடிக்க இலக்கு வைத்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், முன்னணி பாதுகாப்பு வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா கூறுகையில், திங்களன்று சாட்சியமளிக்கும் அனைத்து பாதுகாப்பு சாட்சிகளையும் நிறைவு செய்வதற்கு அவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இன்று காலை புத்ராஜெயாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஷாபி வேறொரு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால், நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி முன் 42 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி வழக்கு விசாரணை வழக்கமான காலை 9 மணிக்கு பதிலாக பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்க உள்ளது.

#TamilSchoolmychoice

இன்றைய எஸ்ஆர்சி விசாரணையில் முன்னாள் மஇகா சட்ட ஆலோசகர் செல்வா மூக்கையா சாட்சியமளிக்க உள்ளார்.

அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை பிரச்சனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அவர் 2015 நவம்பரின் பிற்பகுதியில் சவுதி அரேபியாவின் ரியாத்துக்கு எம்ஏசிசி விசாரணைக் குழுவுடன் சென்றதாகக் கூறப்படுகிறது.