Home One Line P1 தெங்கு அட்னானின் சொத்து சேர்க்கைகள் நேர்மறையான வழியில் வந்தவை!- நஜிப்

தெங்கு அட்னானின் சொத்து சேர்க்கைகள் நேர்மறையான வழியில் வந்தவை!- நஜிப்

719
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் சொத்து சேர்க்கைகள் நேர்மறையான வழியில் சேர்க்கப்பட்டது என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார்.

தெங்கு அட்னான், தொழிலதிபர் வின்சென்ட் டானின் வணிகப் பங்காளியாக இருந்ததாகவும், டி ஸ்டார், செயலிழந்த செய்தித்தாள் ‘வாதான்’ மற்றும் முத்தியாரா தொலைத்தொடர்பு போன்ற பெரிய நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

1997-இல் பிரபல பொருளாதார நிபுணர் எட்மண்ட் டெரன்ஸ் கோமஸ் எழுதிய “மலேசியாவின் அரசியல் பொருளாதாரம்: அரசியல், ஆதரவு மற்றும் இலாபங்கள்” என்ற தகவலின் மூலத்தை நஜிப் மேற்கோள் காட்டினார்.

#TamilSchoolmychoice

“1990-களில், மலேசியாவின் பங்குச் சந்தை நேர்மறையானதாக இருந்தது. அப்போதுதான் தெங்கு அட்னான் தனது செல்வத்தை அதிகரித்தார்.”

“அந்த நேரத்தில், துன் மகாதீர் பிரதமராக இருந்தார், நிதியமைச்சராக அன்வார் இப்ராகிம் இருந்தார். ” என்று நஜிப் இன்று வெள்ளிக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“அந்த நேரத்தில் தெங்கு அட்னான் எவ்வாறு பணக்காரரானார் என்று அவர்கள் இருவரிடமும் கேட்கப்பட வேண்டும்” என்று நஜிப் கூறினார்.

அவரது ஊழல் விசாரணையின் போது மூன்று பிரதமர்களுக்கு முந்தைய சொத்து அறிவிப்புகள் வெளிவந்த பின்னர் தெங்கு அட்னானின் சொத்துகள் கவனத்தை ஈர்த்தது.

2001-இல், துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தனது சொத்துகளை பிரதமருக்கு அறிவிக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், அவரது சொத்து மதிப்பு 1 பில்லியனாகும்.