Home One Line P1 பிகேஆர் கட்சிக்கு துரோகம் இழைத்த முன்னாள் தலைவர்களை கட்டுப்படுத்தத் தவறியதற்கு அன்வார் மன்னிப்பு!

பிகேஆர் கட்சிக்கு துரோகம் இழைத்த முன்னாள் தலைவர்களை கட்டுப்படுத்தத் தவறியதற்கு அன்வார் மன்னிப்பு!

520
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி  அரசாங்கத்தை அகற்றுவதற்கு வழிவகுத்த  முன்னாள் பிகேஆர் தலைவர்களை கட்டுப்படுத்தத் தவறியதற்காக அன்வார் இப்ராகிம்  திங்கட்கிழமை இரவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

கோலாலம்பூரில் உள்ள புக்கிட் கியாரா சைம் டார்பி கன்வென்ஷன் சென்டரில் நடந்த நம்பிக்கைக் கூட்டணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பிகேஆர் தலைவர் இந்த அறிக்கையை வெளியிட்டதாக நம்பப்படுகிறது.

உரையின் ஒரு பகுதியை நேற்று செவ்வாய்க்கிழமை அன்வாரின் முகநூல் கணக்கில் வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

“பிகேஆரில் என்றால் நான் மன்னிப்பு கேட்கிறேன். அது எனது பலவீனங்கள். என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.”

“நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்,” என்று அவர் கூறினார்.

அஸ்மின் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் எந்தவிதமான அறிகுறிகள் இல்லாமல்  உன்னிப்பாக மேற்கொள்ளப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

“தேசத்துரோகத்தின் உறுப்பு நமக்குப் பின்னால் இருக்கிறது. (அவர்கள்) நம்மைப் பார்த்து புன்னகையித்தார்கள், நம்முடன்  உடன்பட்டார்கள். (பின்னர்) நம்மை  முதுகில் குத்தினார்கள்” என்று அன்வார் கூறினார்.

ஆனால் இந்த நடவடிக்கை பிகேஆரை தகர்த்து விடாது  என்று அன்வார் கூறினார்.

“(இது தேவைப்படுகிறது) மீள்வதற்கான தைரியம். கட்சித் தாவுபவர்கள் தாவட்டும்” என்று அவர் மேலும் கூறினார்.