Home One Line P1 எதிர்க்கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அன்வாரே இம்முறை தலைமைத் தாங்குவார்!- வான் அசிசா

எதிர்க்கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அன்வாரே இம்முறை தலைமைத் தாங்குவார்!- வான் அசிசா

672
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதிர்க்கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக அன்வார் இப்ராகிம் நாட்டை வழிநடத்துவார் என்று நம்பப்படுகிறது.

கடந்த மாதம் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வீழ்ந்தது தொடர்பாக, இந்த விஷயத்தை தீர்மானிக்க ஒரு கூட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்வார் பெரும்பாலும் தலைமைத் தாங்குவார் என்று முன்னாள் துணை பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ப்ளூம்பெர்க் தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மகாதீர் பதவி விலகுவதற்கும், 2018 தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதியளித்தபடி, அவரைப் பிரதமர் என்று பெயரிடுவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அன்வார்  காத்திருந்தார். அடுத்தடுத்து வந்த பகை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை வீழ்த்தியது.