துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்கான வழிமுறைக்கு இது வழி வகுக்கும் என்று அது கூறியுள்ளது.
உறுப்பினர் ஒருவர் கொவிட் -19 நோய்க்கு சாதகமான அறிகுறிகளை வெளிப்படுத்தியதால், மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அது கூறியது.
பிப்ரவரி 27 அன்று, ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள ஈபிஎப் கோலாலம்பூர் அலுவலகத்தில் அந்த உறுப்பினர் இருந்தார், மார்ச் 3-ஆம் தேதி அந்நோய்க்கு சாதகமாக அறிகுறிகள் அவரிடத்தில் காணப்பட்டது.
“அலுவலகத்திலிருந்து மற்ற அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். எந்தவொரு நடவடிக்கைக்கும் ஈபிஎப் அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்படுகிறது.”
இதற்கிடையில், மற்ற இடங்களில் உள்ள ஈபிஎப் கிளைகள் வழக்கம் போல் செயல்படும்.