Home One Line P1 “மக்கள் விரும்பினால் நான் அரசியலிருந்து விலக மாட்டேன்!”- மகாதீர்

“மக்கள் விரும்பினால் நான் அரசியலிருந்து விலக மாட்டேன்!”- மகாதீர்

568
0
SHARE
Ad

கோலாலம்பூர்: துன் டாக்டர் மகாதீர் முகமட் அரசியல் அரங்கில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்று கூறியுள்ளார். மக்கள் இன்னும் அவரை விரும்பினால் மீண்டும் தலைமைத் தாங்கத் திரும்ப உள்ளதாக முன்னாள் பிரதமருமான அவர் உறுதியளித்தார்.

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான அரசாங்கத்தில் முறிவு ஏற்பட்டால், அவர் திரும்ப வருவார் என்று 94 வயதான டாக்டர் மகாதீர் கூறினார்.

“இப்போது அவர்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள், நான் அவர்களுக்கு எனது வயது 94 என்று சொன்னேன், ஆனால் அவர்கள் அனுபவம் வாய்ந்த (வேறு) யாரையும் பார்க்கவில்லை என்று சொன்னார்கள்.”

#TamilSchoolmychoice

“பிரதமராக எனக்கு பல வருட அனுபவம் உள்ளது, எனவே என்னால் பல பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

15-வது பொதுத் தேர்தல் வரை அவர் தொடர்ந்து லங்காவி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பார் என்றும் ஒப்புக் கொண்டார்.