Home One Line P2 கொவிட்-19: சிங்கப்பூரில் இருவர் மரணம்!

கொவிட்-19: சிங்கப்பூரில் இருவர் மரணம்!

499
0
SHARE
Ad

சிங்கப்பூர்: கொவிட் -19 பாதிப்புக் காரணமாக இன்று சனிக்கிழமை (மார்ச் 21) இரண்டு பேர் மரணமுற்றதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கன் கிம் யோங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மரணமுற்றவர்களில் ஓர் ஆணும் பெண்ணும் அடங்குவர்.

75 வயதான சிங்கப்பூர் பெண் பிப்ரவரி 23-ஆம் தேதி நிமோனியா நோயால் அனுமதிக்கப்பட்டு 26 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்தார். இன்று சனிக்கிழமை காலை 7.52 மணிக்கு அவர் இறந்தார்.

#TamilSchoolmychoice

64 வயது இந்தோனிசிய ஆடவரான ஒருவர் கடந்த மார்ச் 13-ஆம் தேதி இந்தோனிசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த பின்னர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.