Home One Line P1 கொவிட்-19: நாட்டில் 17-வது மரணம் பதிவானது!

கொவிட்-19: நாட்டில் 17-வது மரணம் பதிவானது!

447
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக நாட்டில் மேலும் ஒரு மரணம் பதிவாகி உள்ளது.

இதுவரையிலும் கொவிட்-19 காரணமாக நாட்டில் மரணமுற்றோரின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.

இன்று அதிகாலை மணி 4:10-க்கு மரணமடைந்த 66 வயது நபர் நீண்ட காலமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த மார்ச் 20-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்னதாக ஒரு வாரத்திற்கு முன்னதாக கொவிட்-19 அறிகுறிகள் அவருக்கு தென்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதன் பிறகு , மார்ச் 21-ஆம் தேதி அவருக்கு அந்நோய் கண்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

இந்நோய் அவருக்கு தொற்றிய காரணம் குறித்து சுகாதாரத் துறை ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.