Home One Line P1 கொவிட்-19: நாட்டில் 156 புதிய சம்பவங்கள் பதிவு- 65 பேர் மரணம்!

கொவிட்-19: நாட்டில் 156 புதிய சம்பவங்கள் பதிவு- 65 பேர் மரணம்!

726
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஏப்ரல் 8) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,119- ஆக உயர்ந்துள்ளது. புதியதாக 156 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று இருவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 65-ஆக அதிகரித்திருக்கிறது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்றைய 76 நிலையில் பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 46 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#TamilSchoolmychoice

மேலும், இன்று 166 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,487-ஆக உயர்ந்திருக்கிறது