Home One Line P1 வரவிருக்கும் நீண்ட காலத்திற்கும் கொவிட் -19 உலகிலேயே தங்கியிருக்கும்!-உலக சுகாதார நிறுவனம்

வரவிருக்கும் நீண்ட காலத்திற்கும் கொவிட் -19 உலகிலேயே தங்கியிருக்கும்!-உலக சுகாதார நிறுவனம்

476
0
SHARE
Ad

ஜெனீவா: கொவிட் -19 வரவிருக்கும் நீண்ட காலத்திற்கும் உலகில் தங்கியிருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை கூறியது.

பெரும்பாலான நாடுகள் இன்னும் இந்த தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்தில் உள்ளன என்று அது எச்சரித்தது.

இது குறித்துப் பேசிய அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், புதிய கொரொனா வைரஸைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்த சில நாடுகள் சம்பவங்களில் மீண்டும் எழுச்சி காண்கின்றன. அதே நேரத்தில் ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் சிக்கலான போக்குகள் உள்ளன என்று கூறினார்.

#TamilSchoolmychoice

ஐநா சுகாதார நிறுவனம் உலகளாவிய அவசரநிலையை நல்ல நேரத்தில் அறிவித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தொற்றுநோயை சரியான முறையில் உலக சுகாதார நிறுவனம் கையாளவில்லை என்றும், அதனால் டெட்ரோஸ் பதவி விலக வேண்டுமென்றும் அமெரிக்கா குறிப்பிட்டு வருகிறது.

“பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோய்களின் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. தொற்றுநோயின் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட சிலர் இப்போது சம்பவங்களில் மீண்டும் எழுச்சி காணத் தொடங்கியுள்ளனர், ”என்று ஜெனீவாவில் நடந்த இணைய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

மேற்கு ஐரோப்பாவில் பெரும்பாலான தொற்றுநோய்கள் நிலையாக இருப்பதாகவும், அது குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், “எண்கள் குறைவாக இருந்தாலும், ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் மேல்நோக்கிய போக்குகளைக் காண்கிறோம்” என்று அவர் கூறினார்.

உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 175,000-ஐ கடந்துவிட்டது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் இந்த தொற்றுநோய் முதன்முதலில் தோன்றியதில் இருந்து 2.5 மில்லியனுக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.