கடந்த 24 மணி நேரத்தில் 99 பேர்கள் கொவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,762 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்தத் தகவல்களை வெளியிட்ட சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, குணமடைபவர்களின் விழுக்காடு தற்போது 65.5 ஆக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தற்போது நாடு முழுமையிலும் 1,882 பேர்கள் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 36 பேர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 16 பேர்கள் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே வேளையில் இருவர் ஒரே நாளில் மரணமடைந்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 98 ஆக உயர்ந்திருக்கிறது.