Home One Line P2 கொவிட்-19 : செப்டம்பருக்குள் தடுப்பூசி கண்டு பிடிக்கப்படலாம் – இந்திய நிறுவனம் நம்பிக்கை

கொவிட்-19 : செப்டம்பருக்குள் தடுப்பூசி கண்டு பிடிக்கப்படலாம் – இந்திய நிறுவனம் நம்பிக்கை

537
0
SHARE
Ad

புதுடில்லி – தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் இந்திய நிறுவனம் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம். உலக நாடுகள் பலவற்றிலும் பல மருத்துவ ஆராய்ச்சி மையங்களிலும் கொவிட்-19 தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் செரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமைச் செயல் அதிகாரி அடர் பூனாவாலா (படம்) விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தாங்கள் தயாரித்து வரும் கொவிட்-19 எதிரான தடுப்பூசி நல்ல பரிசோதனை முடிவுகளைத் தந்திருப்பதாவும் செப்டம்பர் இறுதிக்குள் அது சந்தைக்கு வரும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கும் எனவும் அவர் கோடி காட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து செரம் இன்ஸ்டிடியூட் கொவிட்-19 தடுப்பூசியைக் கண்டுபிடிக்கத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

அந்நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் தடுப்பூசி மருந்து மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அது நல்ல பலன்களைத் தந்திருப்பதாவும் அடர் பூனாவாலா தெரிவித்திருக்கிறார்.