Home One Line P2 கொவிட்-19: சிங்கப்பூரில் 16-வது இறப்பு பதிவானது!

கொவிட்-19: சிங்கப்பூரில் 16-வது இறப்பு பதிவானது!

555
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நேற்று வெள்ளிக்கிழமை, 932 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்களை உறுதிப்படுத்தியது. மேலும், இறப்பு எண்ணிக்கை 16- ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர், முதல் இரண்டு இறப்புகளை மார்ச் 21-ஆம் தேதியன்று பதிவு செய்தது.

இன்றுவரை, 1,268 பேர் முழுமையாக மீட்கப்பட்டு மருத்துவமனை அல்லது சமூக தனிமை வசதிகளிலிருந்து திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

மே 1-ஆம் தேதி வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட 24 நோயாளிகளில், 102 வயதான, முதியவரும் அடங்குவார் என்று உள்ளூர் செய்தி ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.