Home One Line P1 19 சட்டமன்ற உறுப்பினர்கள் முக்ரிஸ் மீது நம்பிக்கை இழந்ததாக அறிவிப்பு

19 சட்டமன்ற உறுப்பினர்கள் முக்ரிஸ் மீது நம்பிக்கை இழந்ததாக அறிவிப்பு

552
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: 36 கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் 19 பேர் முதல்வர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் துன் மகாதிர் தலைமையில் நம்பிக்கை இழந்ததாக இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.

கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த இரண்டு பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் உட்பட ,15 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு அம்னோ உறுப்பினர்கள் முக்ரிஸின் தலைமையில் நம்பிக்கைக் இழந்ததாக கெடா மாநில எதிர்க்கட்சித் தலைவர் முகமட் சனுசி முகமட் நோர் கூறினார்.

19 சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய முகமட் சனுசி, நான்கு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முக்ரிஸ் மீதான நம்பிக்கையை இழந்ததாகக் கூறியதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

“இன்று கலந்து கொண்ட 23 சட்டமன்ற உறுப்பினர்களில் 19 பேருடன் உடன்பாடு கொண்டு, தேசிய கூட்டணி சார்பாக புதிய அரசாங்கத்தை அமைக்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.

இந்த குழு இப்போது புதிய அரசாங்கத்தை அமைக்க கெடா சுல்தான் சல்லேஹுடின் சுல்தான் பட்லிஷாவை சந்திக்க காத்திருக்கிறது என்று அவர் கூறினார்.