Home One Line P1 தொடக்கமாக எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்

தொடக்கமாக எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்

811
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 பாதிப்பைத் தொடர்ந்து மாறியுள்ள இன்றைய கற்பித்தல் துறையில் ஒரு புதிய பாரம்பரியமான இயங்கலை கற்பித்தல் மற்றும் ‘வீட்டு அடிப்படையிலான கற்றல்’ ஆகியவற்றின் திறன்களில் தேர்ச்சி பெறுமாறு ஆசிரியர்களை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில், கற்பித்தல் மற்றும் கற்றல் இனி நேருக்கு நேர் நடத்தப்படவில்லை, அதற்கு பதிலாக ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைவதற்கு வேறு பல முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

“பலர் வீட்டு அடிப்படையிலான கற்றலைச் செயல்படுத்த கூகுள், கிளாஸ்ரூம், சிக்கூடியூப் மற்றும் சூம் போன்ற இயங்கலை பயன்பாடுகளைப் பயன்படுத்துகின்றனர். வாட்சாப் மற்றும் டெலிகிராம் பயன்பாடுகளையும் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். இயங்கலை வாயிலாக விளையாட்டுப் பயிற்சியை வழங்கும் ஆசிரியர்களும் உள்ளனர் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

“ஆனால், இயங்கலை வாயிலாக கற்றலை வீட்டிலேயே செயல்படுத்த இன்னும் தடைகள் உள்ளன என்பதை நான் உணர்கிறேன், ஏனெனில் எல்லா மாணவர்களுக்கும் நல்ல இணைய அணுகல் இல்லை. பலரிடம் சரியான சாதனம் கூட இல்லை.

“இம்மாதிரியான மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பலவிதமான முறைகளைப் பயன்படுத்துவதை நான் அறிவேன். எடுத்துக்காட்டாக, மாணவர் வீட்டுப்பாடங்களுக்கான கேள்விகளை அச்சிட்டு, மாணவர்களின் வீடுகளுக்கு கேள்விகளை அனுப்ப பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து சிலர் செயல்படுகின்றனர்.” என்று பிரதமர் கூறினார்.

கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் அறிவித்தபடி, பள்ளி மீண்டும் திறக்கப்படுவதற்கான தேதி பள்ளி திறக்கப்படுவதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

“பள்ளி திறக்கும் போது, ​​தொடக்கமாக மலேசிய கல்விச் சான்றிதழ் (எஸ்பிஎம்), எஸ்விஎம், மலேசிய உயர்நிலை பள்ளி சான்றிதழ் (எஸ்டிபிஎம்), மற்றும் எஸ்டிஏஎம் ஆகியவற்றிற்கு அமரும் மாணவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். ”

“இது கூடல் இடைவெளி மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் குறித்த நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை, கல்வி அமைச்சினால் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதாகும். மாணவர்களின் வருகை, பள்ளி இயக்கம், வகுப்பறையில் அட்டவணை அமைத்தல், சிற்றுண்டி இயக்கம் மற்றும் பல அம்சங்கள் தொடர்பான நடைமுறைகளை இது உள்ளடக்கியது, ” என்று அவர் கூறினார்.