Home One Line P1 கொவிட்19: நாட்டில் 50 புதிய சம்பவங்கள் பதிவு- 41 பேர் வெளிநாட்டினர்

கொவிட்19: நாட்டில் 50 புதிய சம்பவங்கள் பதிவு- 41 பேர் வெளிநாட்டினர்

413
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: இன்று வியாழக்கிழமை (மே 21) நண்பகல் வரை மலேசியாவில் 50 புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நாட்டில் 7,059-ஆக உயர்ந்திருக்கிறது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

50 புதிய பாதிப்புகளில் 3 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாவர். மேலும், இவர்களில் 41 பேர் வெளிநாட்டினர் ஆவர். எஞ்சிய 6 பேர் உள்நாட்டிலேயே தொற்று கண்டவர்கள்.

#TamilSchoolmychoice

கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் கொவிட் பாதிப்பிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பியிருக்கின்றனர். கொவிட்19 தொற்று தொடங்கியது முதல் இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,796-ஆக உயர்ந்திருக்கிறது

தற்போது நாடு முழுமையிலும் 1,149 பேர் மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. 7 பேர் சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.