Home One Line P1 மாநில எல்லை தாண்டியது கண்டறியப்பட்டால், குடும்பத் தலைவர் காவல் நிலையத்தில் நிறுத்தப்படுவார்

மாநில எல்லை தாண்டியது கண்டறியப்பட்டால், குடும்பத் தலைவர் காவல் நிலையத்தில் நிறுத்தப்படுவார்

551
0
SHARE
Ad

அலோர் காஜா: இந்த நோன்பு பெருநாளின் போது அனுமதியின்றி மாநில எல்லையைத் தாண்டி பயணிக்கும் விருந்தினரைப் பெறுவதைக் கண்டறிந்தால், வீட்டு உரிமையாளரை காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்ல மலாக்கா காவல் துறை எந்த தயக்கமும் காட்டாது என்று அதன் தலைவர் டத்தோ மாட் காசிம் கரீம் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான எண்ணிக்கையிலான நிறுத்தப்பட்ட வாகனங்கள் உள்ள வீட்டை விரைவாக சோதனை செய்ய மாநிலத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் 94 காவல்துறையினர் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

நிபந்தனைக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பயணம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மாவட்ட எல்லையைத் தாண்டிச் செல்வதாகத் தெரிவித்து, கிராமத்திற்குத் திரும்ப முயற்சிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் இந்த ஆணைக்கு இணங்க மற்றும் சரியான அனுமதி இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். எந்த முக்கியமான காரணமும் இல்லாமல் மாநில எல்லைகளைக் கடக்க முயற்சிக்காதீர்கள்.”

“1,000 ரிங்கிட் செலுத்தி பணத்தை வீணாக்காதீர்கள்.” என்று அவர் கூறினார்.