Home One Line P1 மகாதீரை பதவி விலகும் தேதியை நிர்ணயிக்கக் கோரும் ஒலிப்பதிவு உண்மையானது- அன்வார்

மகாதீரை பதவி விலகும் தேதியை நிர்ணயிக்கக் கோரும் ஒலிப்பதிவு உண்மையானது- அன்வார்

542
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிப்ரவரி 21-ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றக் கூட்டத்தின் ஒலிப்பதிவை உறுதிப்படுத்தினார்.

இது சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

“நான் ஒரு நீண்ட ஒலிப்பதிவை கேட்டேன். இது போலியானது அல்ல, அது நடந்தது நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றக் கூட்டத்தில்.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மே 17-ஆம் தேதி அன்று, “பிப்ரவரி 21 அன்று நடந்த தலைவர்கள் கூட்டத்தின் பிரத்தியேக வெளிப்பாடு” என்ற தலைப்பில் ஓர் ஒலிப்பதிவு, துன் மகாதீருக்கு ஆதரவாக பெர்சாத்து என்ற முகநூலில் வெளியிடப்பட்டது.

அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் இருந்து அன்வாருக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான தேதியை நிர்ணயிப்பது குறித்துப் பேசுவதை இந்த ஒலிப்பதிவு காட்டுகிறது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டத்திற்குப் பிறகு நிர்ணயிக்கப்பட்ட தேதியை அமானா தலைவர்களும் ஜசெகவும் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

பெர்சாத்து தலைவரும், பிகேஆர் துணைத் தலைவருமான அஸ்மின் அலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மகாதீர் முழு தவணையும் இருக்க விரும்பினர்.

மகாதீர் பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டத்திற்குப் பிறகு பதவி மாற்றம் தேதி அறிவிக்கப்படும் என்றும், சரியான தேதி அவரைப் பொறுத்தது என்றும் அறிவித்தார்.