நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தும் போது மாநில அரசு சமீபத்தில் உணவக வளாகத்தில் உணவை அனுமதித்திருந்தாலும், அது ஒத்துழைப்பு மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களுடன் செயல்படுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை புத்துயிர் பெற மாநில அரசு நம்புகின்ற அதேவேளை, கொவிட்19- க்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவுக்கு வராததால், மேலும் முன்னெச்சரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
“சிகை அலங்காரம் மற்றும் முடிதிருத்தும் கடை மீண்டும் திறக்கப்படுவது தொடர்பாக, இது மற்ற துறைகளுடன் இணைந்து விவாதிக்கப்பட்டது. ஆனால், பொருளாதாரம் மற்றும் பொது பாதுகாப்புக்கு இடையில் (மீட்பு) சமநிலைக்கு ஒரு நடவடிக்கை இருக்க வேண்டும்.
“முடிவு எடுக்கப்பட்டவுடன் நாங்கள் ஓர் அறிவிப்பை வெளியிடுவோம்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.