Home One Line P1 முடிதிருத்தும் கடைகளுக்கு மோசமான பாதிப்பு- அரசிடம் உதவி கோருகின்றன

முடிதிருத்தும் கடைகளுக்கு மோசமான பாதிப்பு- அரசிடம் உதவி கோருகின்றன

698
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு மருத்துவர் சங்கம் என்று அழைக்கப்படும் முடிதிருத்துபவர்களின் சங்கம், கொவிட்-19 பாதிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நிதி உதவி பெற மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை நாடியுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் செயல்பட அனுமதிக்காததால் வருமானம் இழந்த போதிலும், முடிதிருத்தும் நபர்களுக்கு சிறப்பு உதவி எதுவும் வழங்கப்படவில்லை என்று அதன் தலைவர் எம். தமிழ்மணி கூறினார்.

“பினாங்கில், சுமார் 150 முடிதிருத்தும் கடைகள் உள்ளன. இதில் 450 முடிதிருத்தும் நபர்கள் உள்ளனர். எங்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக, கடைகள் மூடப்பட்டுள்ளன. எங்களுக்கு மாத வருமானம் இல்லை. ஒரு மாதத்திற்கு 2,000 முதல் 3, 000 வரை இழந்துவிட்டோம்.”

#TamilSchoolmychoice

“சில முடிதிருத்தும் கடைகளில் தினசரி ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஊதியம் வழங்குபவர்களும் உள்ளனர்” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

சங்கம் இன்று மாநில அரசிடம் நிதி உதவி கோரி முதல்வர் சௌ கோன் யோவுக்கு கடிதம் அனுப்பும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது முடிதிருத்தும் கடைகளை, குறிப்பாக பச்சை மண்டல பகுதிகளில் மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு சங்கத்தின் பொருளாளர் வி.தர்மராஜ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

“ஆரம்ப கட்டத்தில், முடி வெட்டுவதற்கு மட்டுமே அனுமதிக்குமாறு நான் அரசாங்கத்தை பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் பல வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிற்கு வந்து முடி வெட்டுவதற்கு அழைத்தனர். ஆனால், இது அரசாங்க ஆணையை மீறுவதால் நாங்கள் அதை செய்ய முடியாது.”

“கூடல் இடைவெளி, முகக்கவசம் அணிவது, தொற்று தடைப்பொருளை வழங்குவது மற்றும் கடைகளை தினமும் சுத்தம் செய்வது போன்ற நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க முறைமைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.