Home One Line P1 கொவிட்19: 15 புதிய சம்பவங்கள்-மலேசியர்கள் ஐவர் பாதிப்பு

கொவிட்19: 15 புதிய சம்பவங்கள்-மலேசியர்கள் ஐவர் பாதிப்பு

473
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15 புதிய கொவிட்-19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 7,619 -ஆக உயர்ந்தது.

எனினும் இன்று மரணங்கள் ஏதும் நிகழவில்லை. கடந்த இரண்டு நாட்களாக மூன்று குடிநுழைவு முகாம்களில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று இலக்கு எண்ணை அடைந்தது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 15 பாதிப்புகளில் 6 பாதிப்புகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்கள். மீதமுள்ள ஒன்பது பேரில் நால்வர் வெளிநாட்டினர்.

#TamilSchoolmychoice

இன்று 42 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,083-ஆக உயர்ந்தது.

1,421 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் எண்மர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில், நால்வருக்கு சுவாசக் கருவி தேவைப்படுகிறது.