Home One Line P1 துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக கல்லூரிக்கு 58 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டது

துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக கல்லூரிக்கு 58 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டது

805
0
SHARE
Ad

கோலாலம்பூர்: துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக கல்லூரி (TAR UC) உயர் கல்வி நிறுவனத்திற்கு 58 மில்லியன் ரிங்கிட்டை திருப்பிக் கொடுத்த அரசுக்கு அதன் தலைவர் லீ ஸ்ஸே வீ நன்றி தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு மலிவு விலையில் தரமான கல்வியைத் தொடர்ந்து வழங்க இந்த நிதி உதவும் என்று அவர் கூறினார்.

“இது எங்களுக்கு உண்மையிலேயே ஒரு நல்ல செய்தி, ஏனெனில் இது அனைத்து மலேசியர்களுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கான தனது பணியைத் தொடர கல்லூரிக்கு உதவுகிறது” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அமைச்சின் ஒப்புதலுக்கு நிதி அமைச்சர் தெங்கு ஜாப்ருல் தெங்கு அப்துல் அசிஸுக்கு நேற்று மசீச தலைவர் வீ கா சியோங் நன்றி தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணி நிதி மந்திரி லிம் குவான் எங் கல்லூரிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் வீ கூறியிருந்தார்.

அக்கல்லூரியில் மசீச தனது பங்குகளை கைவிட்டால், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் 30 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்க தயாராக இருக்கும் என்று லிம் கூறினார்.

2019 டிசம்பரில், கல்லூரியின் கல்வி அறக்கட்டளை நிதிக்கு அரசாங்கம் 40 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக லிம் கூறினார்.