Home One Line P1 சீனா- இந்தியா பிரச்சனையில் டிரம்ப் நடுவராக செயல்பட விருப்பம்

சீனா- இந்தியா பிரச்சனையில் டிரம்ப் நடுவராக செயல்பட விருப்பம்

585
0
SHARE
Ad

வாஷிங்டன்: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையில் நடுவராக இருக்க வாஷிங்டன் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை (மே 27) தெரிவித்தார்.

“இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும், அமெரிக்கா நடுவராக இருக்க தயாராக உள்ளது மற்றும் அவர்களின் இப்போது அதிகரித்து வரும் எல்லைப் பிரச்சனையில் உதவ முடியும் என்பதை நாங்கள் அறிவித்துள்ளோம்.” என்று டிரம்ப் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய ஜம்மு-காஷ்மீரின் லடாக் வட்டாரத்தில் எல்லையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சிக்கல் உருவாகி வருகிறது. இரண்டு அணு ஆயுத அண்டை நாடுகளும் இப்பகுதியில் இமயமலையில் பல தசாப்தங்களாக நிலப்பரப்பைக் கோருகின்றன.

#TamilSchoolmychoice

மே முதல் வாரத்தில், இந்திய மற்றும் சீன வீரர்கள் லடாக்கின் பங்கோங் த்சோ ஏரி மற்றும் நகு லா பகுதிகளில் ஒருவருக்கொருவர் கற்களை வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.

இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர், அவரவர் துருப்புக்கள் தங்கள் பிரதேசங்களை மீறியதாகக் கூறுகின்றனர்.