Home நாடு கு.சின்னப்பாரதி இலக்கிய விருது- மலேசிய எழுத்தாளர்களின் நூல்கள் வரவேற்கப்படுகின்றன

கு.சின்னப்பாரதி இலக்கிய விருது- மலேசிய எழுத்தாளர்களின் நூல்கள் வரவேற்கப்படுகின்றன

845
0
SHARE
Ad

ku.sinnabarathiகோலாலம்பூர், ஏப்ரல் 12- நாமக்கல்லை தலையிடமாகக் கொண்டு 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கு.சின்னப்பாரதி (படம்) இலக்கிய அறக்கட்டளையின் 5ஆம் ஆண்டு இலக்கிய விருதுக்கான பரிந்துரைகள் பரிசுகளுக்கான நூல்கள் வரவேற்கப்படுவதாகவும் மலேசிய எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த இலக்கிய விருது நிகழ்வில்முதன்மை விருதுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், கேடயம் மற்றும்  சான்றிதழ்கள் வழங்கப்படும். அதேசமயம் சிறப்பு விருதாக பத்தாயிரம் ரூபாய்  அளிக்கப்படும். கீழ்காணும் பரிசுகளுக்கான நூல்கள் வரவேற்கப் படுகின்றன.

booksநாவல் கட்டுரை (இலக்கிய ஆய்வு உட்பட), சிறுகதை, மொழிப்பெயர்ப்பு கணினி தமிழ் இலக்கியம், சமூகச் சேவை, சிறந்த பத்திரிக்கையாளர் ஆகிய துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில் ஏதேனும் ஒரு துறைக்கு நூலின் தரத்தின் அடிப்படையில் முதன்மை விருதும் பிற துறைகளில் வரவேற்பு பெற்ற இலக்கியத்திற்கான சிறப்பு விருதுகளும் வழங்கப்படும். எழுத்தாளர், பதிப்பாளர் அல்லது அவர்கள் சார்பாக யாரும் விண்ணப்பத்தையும் நூல்களையும் அனுப்பலாம். விண்ணப்ப படிவத்தை www. kucbatrust. com என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

#TamilSchoolmychoice

இந்தியா உட்பட வெளிநாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் விண்ணப்பிக்கலாம். படைப்புகள் 1.1.2008 முதல் 31.12.2013க்குள் முதல் பதிப்பு வந்ததாக இருக்க வேண்டும். விருதுகள் விண்ணப்பமும் படைப்புகளும் வர வேண்டிய இறுதிநாள் மே 31, தாமதமாக வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. விருதுக்காக  அனுப்பி வைக்கப்படும் படைப்புகள் எக்காரணத்தை முன்னிட்டும் திருப்பி அனுப்பமாட்டா. பரிசளிப்பு விழா அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடைபெறும். இறுதி முடிவு அறக்கட்டளைச் சார்ந்தது. படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி,

Rangasamy, 6-175,

K.G. Bose Bostel Nagar,

Potupatti (Post), Nalli Palayam (Via),

Namakal, Tamilnadu 637003.