Home One Line P1 மார்சுகி யாஹ்யாவின் சேவை நிறுத்தத்தை உச்சமன்றக் குழு ஏற்றது

மார்சுகி யாஹ்யாவின் சேவை நிறுத்தத்தை உச்சமன்றக் குழு ஏற்றது

405
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கட்சி அரசியலமைப்பின் படி மார்ச் 18-ஆம் தேதி கட்சி பொதுச் செயலாளரான மார்சுகி யஹ்யாவின் சேவை நிறுத்தத்தை பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுதி செய்ததாக இப்போதைய பொதுச் செயலாளர் டத்தோ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

முன்னதாக, பெர்சாத்து கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டத்தோ மார்சுகி யஹ்யா, பினாங்கு பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

பிரதமரும், பெர்சாத்து தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) மார்சுகியை பதவி நீக்கம் செய்து, ஒரு கடிதத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

“மார்சுகி பினாங்கு பெர்சாத்து முதல்வர் பதவியை உடனடியாக வகிப்பதிலிருந்து நிறுத்தப்படுகிறார்.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

“உங்கள் பதவிக்காலம் முழுவதும் உங்கள் பங்களிப்புகளுக்கும் உங்கள் சேவைகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன், பாராட்டுகிறேன்.” என்று அவர் கையெழுத்திட்ட கடிதத்தை பார்வையிட்டதாக ஸ்டார் ஊடகம் கூறியிருந்தது.

அவருடன் மேலும், இருவர் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

டாக்டர் மகாதீரை ஆதரிக்கும் பெர்சாத்து உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளின் வரிசையில் மார்சுகி மற்றும் பிற இரண்டு பேரின் நீக்கம் அமைவதாகக் கூறப்படுகிறது.