இன்று ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் நாட்டின் மரண எண்ணிக்கை 116- ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 19 பாதிப்புகளில், 3 சம்பவங்கள் வெளிநாட்டினர் உள்ளடக்கியதாகும். 9 பேர் மலேசியர்கள் என்று அவர் தெரிவித்தார். இறக்குமதி சம்பவங்கள் 7 பேர்.
இன்று 51 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,610-ஆக உயர்ந்தது.
1,540 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில், ஒருவர் சுவாசக் கருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்.