Home One Line P1 கொவிட்19: புதிதாக 10 சம்பவங்கள் பதிவு- எழுவர் மலேசியர்

கொவிட்19: புதிதாக 10 சம்பவங்கள் பதிவு- எழுவர் மலேசியர்

411
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,515-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 10 பாதிப்புகளில், 10 பேர் உள்ளூரிலேயே தொற்று கண்டவர்கள். 3 பேர் வெளிநாட்டினர், 7 பேர் மலேசியர்கள்.

#TamilSchoolmychoice

இன்று 140 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,873-ஆக உயர்ந்தது.

521 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.