Home One Line P1 கம்போங் பாண்டான் இடைநிலைப் பள்ளிக்கு மொகிதின் யாசின் வருகை

கம்போங் பாண்டான் இடைநிலைப் பள்ளிக்கு மொகிதின் யாசின் வருகை

766
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை (ஜூன் 24) நாடு முழுவதும் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் ஐந்தாம் படிவம், ஆறாம் படிவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பள்ளிகளில் புதிய நடைமுறைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதைக் கண்டறிய தலைநகர் கம்போங் பாண்டானிலுள்ள டத்தோ லோக்மான் பள்ளிக்கு நேரடியாக வருகை புரிந்தார். அவருடன் கல்வி அமைச்சர் ரட்சி மாட் சின்னும் வருகை புரிந்தார்.

கம்போங் பாண்டான் வட்டாரத்தை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதியான தித்திவாங்சா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரீனா ஹருணும் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

மொகிதின் யாசின் வருகையின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:

படங்கள் – நன்றி : மொகிதின் யாசின் முகநூல் பக்கம்