Home One Line P1 நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய மறைகாணிகளை பினாங்கு பயன்படுத்தும்

நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய மறைகாணிகளை பினாங்கு பயன்படுத்தும்

397
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன்: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு பொது மக்கள் உட்பட வணிக வளாகங்கள் இணங்குவதை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் கண்காணிக்க ஒருங்கிணைந்த காணொளி பகுப்பாய்வு அமைப்பு மறைகாணிகளை பினாங்கு அரசு பயன்படுத்தும்.

பொது வீட்டுவசதி, பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், பொதுமக்கள் நடைமுறைக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காகவும் மாநில அரசு தொடர்ந்து மின்னியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்று மாநில வீட்டுவசதி, ஊராட்சி மற்றும் நகர மற்றும் நாடு திட்டக் குழுத் தலைவர் ஜகதீப் சிங் தியோ தெரிவித்தார்.

நடைமுறையை மீறி யாராவது பிடிபட்டால் பினாங்கு நகராட்சி மன்ற மற்றும் செபெராங் பெராய் நகராட்சி மன்ற அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை செய்வார்கள் என்றும், அது தொடர்ந்தால் காவல் துறை மேலும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

#TamilSchoolmychoice

“பினாங்கு இன்னும் பச்சை மண்டலமாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், கொவிட்19 தொற்றுநோய்க்கு எதிரான போர் முடிவடையவில்லை. எனவே நடைமுறைகளை கைவிடுவது தொடர்பாக எந்த சமரசமும் ஏற்படாது. ” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அனைத்து அம்சங்களிலும் கொவிட்19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட மாநில அரசு ஏழு செயற்குழுக்களை அமைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.