Home One Line P2 கொவிட்19: வெளிநாடுகளிலிருந்து 500,000 இந்தியர்கள் மீட்பு

கொவிட்19: வெளிநாடுகளிலிருந்து 500,000 இந்தியர்கள் மீட்பு

445
0
SHARE
Ad

சென்னை: வெளிநாடுகளில் வேலையிழந்து வேறு வழியின்றி அங்கேயே தங்கி வந்த இந்தியர்களை மீட்பதற்காக இந்திய மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பாக தொடங்கி வைத்தது.

அந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து 5 இலட்சம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மட்டும் 94,085 பேர் மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் அதிகமானோர் உத்தரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத், ஆந்திரா மாநிலத்தில் உள்ளவர்கள் ஆவர்.

#TamilSchoolmychoice

துபாயில் இருந்து அதிகபட்சமாக 57,305 இந்தியர்கள் மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மேலும் 25,939 தமிழர்கள் தற்போது தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். அவர்களை இந்தியா கொண்டு வருவதற்கான வழிகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.