Home One Line P1 பிரதமர் வேட்பாளர் குறித்து தலைவர் பேசட்டும்!

பிரதமர் வேட்பாளர் குறித்து தலைவர் பேசட்டும்!

451
0
SHARE
Ad
படம்: அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் முகமட் புவாட் சர்காசி

கோலாலம்பூர்: பிரதமர் வேட்பாளர் உட்பட கட்சி கொள்கை குறித்த எந்தவொரு அறிவிப்பும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியின் வாயிலிருந்து வர வேண்டும் என்று அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் முகமட் புவாட் சர்காசி கூறினார்.

பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதத்தில் அம்னோ உறுப்பினர்களை இழுத்துச் செல்லக்கூடாது என்ற அகமட் சாஹிட்டின் ஆலோசனையை வரவேற்று அவர் இவ்வாறு கூறினார்.

“தேசிய கூட்டணியில் அம்னோ பங்கேற்பது உள்ளிட்ட கொள்கை சிக்கல்கள் அம்னோ தலைவரின் வாயிலிருந்து வர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

#TamilSchoolmychoice

“தேசிய முன்னணி அல்லது அம்னோவின் பொதுச் செயலாளர் அனுவார் மூசா அல்ல.

“பாஸ் தலைவர்களும் தேசிய முவாபாக்காட்டின் இணக்கத்திற்கு மதிப்பளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று அவர் நேற்று கூறினார்.

15 வது பொதுத் தேர்தலுக்கான 15-வது பிரதமர் வேட்பாளராக மொகிதின் யாசினுக்கு ஆதரவளித்த அறிக்கையுடன் ஒப்பிடும்போது, அகமட் சாஹிட்டின் அறிக்கை வித்தியாசமாகத் தெரிந்தது, இது சில தனிநபர்களிடமிருந்து வந்தது, ஆனால், தலைவரிடமிருந்து அல்ல என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சில தனிநபர்களுக்கான நிலைப்பாடு ஒருபோதும் அம்னோவுடன் உடன்படாது என்றும் அவர் கூறினார்.

“பிரதமர் வேட்பாளர் பற்றி சில நபர்களிடமிருந்து அறிக்கைகள் வரும்போது இது வித்தியாசமாக தெரிகிறது. அம்னோ இதற்கு முன்பு ஒப்புக் கொண்டதல்ல. ” என்று அவர் கூறினார்.

அண்மையில், அம்னோவும் பாஸ் கட்சியும் அடுத்த தேர்தலுக்கான பிரதமராக மொகித்ன் யாசினை தேர்ந்தெடுப்பதாக அனுவார் மூசாப், பாஸ் கட்சியின் பரிந்துரைக்கு உறுதிபடுத்தியிருந்தார்.

அண்மையில், ஒரு சந்திப்புக் கூட்டத்தில் இந்த முடிவு விவாதிக்கப்பட்டதாகவும், பெர்சாத்து தலைவரான அவருக்கு இரண்டு பெரிய மலாய்-முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“அம்னோவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான முவாபாக்காட் நேஷனல் தலைவர்களுடனான சந்திப்பு குழு மட்டத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தது. அங்கு மொகிதினை பிரதமராக தொடர்ந்து ஆதரிக்க நாங்கள் ஒப்புக் கொண்டோம்.

“வரவிருக்கும் தேர்தல்களில், இரு கட்சிகளும் பிரதமராக மொகிதினை நியமிக்க அல்லது ஆதரிக்க ஒப்புக் கொண்டுள்ளன.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பரிந்துரைக்குப் பிறகு அம்னோ தலைவர்கள் உட்பட உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

இதற்கிடையில், அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோ ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசியல் உறுதியற்றத் தன்மையாக மாறும் என்று துங்கு ரசாலி ஹம்சா கருத்துரைத்திருந்தார்.

“பெர்சாத்து இந்த பேச்சு வார்த்தைக்குள் வரக்கூடாது. இது வெறும் முவாபாக்காட் நேஷனல் (அம்னோ- பாஸ்), பாரம்பரிய கூட்டணிக் கட்சிகளான மசீச மற்றும் மஇகா உடனான பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும்.

“பின்னர் இடங்களை ஒதுக்கீடு செய்வதில் உங்களுக்கு அதிக சிக்கல் இருக்காது.

“ஆனால், நீங்கள் பெர்சாத்துவைக் கொண்டு வந்தால், நாம் மீண்டும் நிலையற்ற ஓர் ஆட்சியை ஏற்படுத்துவோம். அது நம்மை மீண்டும் ஒரு தொந்தரவு நிலைக்கு தள்ளும். யாரும் ஆதிக்க நிலையில் இருக்க மாட்டார்கள், தெளிவான பெரும்பான்மையும் இருக்காது.” என்று குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ‘ஷெரட்டன் நகர்வு’ மூலம் நம்பிக்கைக் கூட்டணி வெளியேற்றப்பட்ட பின்னர் டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு பதிலாக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பிரதமராக பதவி ஏற்றார்.