Home One Line P2 இரண்டாவது நாளாக உள்நாட்டில் தொற்று இல்லை!

இரண்டாவது நாளாக உள்நாட்டில் தொற்று இல்லை!

413
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,683-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 6 சம்பவங்களும், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள் ஆவர். இன்று உள்நாட்டில் இரண்டாவது நாளாக எவருக்கும் கொவிட்19 தொற்று ஏற்படவில்லை.

#TamilSchoolmychoice

தொடர்ந்து 28 நாட்களுக்கு நாட்டில் கொவிட்19 தொற்று பதிவு செய்யப்படாமல் இருந்தால், நாடு இந்த தொற்றிலிருந்து முழுமையாக விடுப்பட்டதாக அர்த்தம் என்று அண்மையில் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

இதனிடையே, இன்று 13 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,499-ஆக உயர்ந்தது.

நாட்டில் மொத்தம் 63 பேர் மட்டுமே இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருவருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.