Home One Line P1 ஜசெக, அமானாவுடன் ஷாபி பேச்சுவார்த்தை!

ஜசெக, அமானாவுடன் ஷாபி பேச்சுவார்த்தை!

408
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த மாதம் நம்பிக்கைக் கூட்டணி பிளாஸிற்கான பிரதமர் வேட்பாளர் என்று கூறப்பட்டபோது சபா முதலமைச்சர் ஷாபி அப்டாலின் பெயர் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

ஜசெகவும் அமானாவும் இந்த முன்மொழிவுக்கு ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது. பின்னர், அவர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். இது குறித்து நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்ற மட்டத்தில் முடிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

ஜூலை 5-ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணி, மீண்டும் அன்வாரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதாகக் கூறியது.

#TamilSchoolmychoice

நேற்றைய நேர்காணலில், ஜசெக, அமானா ஆகியோர் முதலில் அவரது பெயரை முன்மொழிந்ததை ஷாபி வெளிப்படுத்தினார்.

“இது ஜசெக, அமானாவால் முன்மொழியப்பட்டது. அது டாக்டர் மகாதீர் முகமட்டின் திட்டம் அல்ல. மகாதீரும் அன்வாரும் இணைந்து செயல்பட முடியாது என்பதால் ஒரு தீர்வை வழங்க இதுபோன்ற ஒரு யோசனையை அவர்கள் கொண்டு வந்தார்கள்” என்று கோலாலம்பூரில் அவர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதை ஜசெக, அமானாவின் இந்த முடிவு நிரூபிக்கும் என்று ஷாபி விவரித்தார்.

ஆகவே, இந்த விவகாரமாக தாம் முதலில் ஜசெக, அமானாவுடன் பேச வேண்டும் என்று ஷாபி தெரிவித்தார்.

அன்வார் நேற்று அவரை நாடாளுமன்றத்தில் சந்தித்து அவருடன் கலந்துரையாடச் சொன்னதாக ஷாபி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், முன்மொழியப்பட்ட இரு கட்சிகளும் வேறுவிதமாகக் கூறியதால், இந்த யோசனையைப் பற்றி அன்வாரிடம் பேச முடியாது என்று ஷாபி மேலும் கூறினார்.

“எனது பெயரை பரிந்துரைக்கும் நண்பர்களுடன் பேச வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன். நான் முதலில் (அதை) உறுதிப்படுத்த வேண்டும்.

” நான் அன்வாரிடம் அதைப் பற்றி சொல்ல முடியாது. நான் உண்மையில் அதை விரும்பவில்லை. நான் விரும்புவது பிரச்சனைக்கு ஒரு தீர்வு மட்டுமே.

“நான் அமானா, ஜசெகவுடன் ஒரு தீர்வை எட்டுகிறேன். என்னை கூறுகிறார்கள், திடீரென்று இன்னொருவர் என்று பரிந்துரைக்கிறார்கள். எனவே, முதலில் அவர்களுடன் நாங்கள் தீர்வு காண வேண்டும் என்று நினைக்கிறேன்.”

இந்த திட்டத்துடன் பிகேஆரை சம்மதிக்க அவர்கள் முயற்சிப்பார்கள் என்று ஷாபி கூறினார்.