Home One Line P2 ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஒபாமா கணக்குகள் ஊடுருவப்பட்டன!

ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஒபாமா கணக்குகள் ஊடுருவப்பட்டன!

659
0
SHARE
Ad

கலிபோர்னியா: ஆப்பிள், எலோன் மஸ்க், ஜெப் பெசோஸ் மற்றும் பலரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகள் ஜூலை 15-ஆம் தேதி ஊடுருவப்பட்டன.

எண்ணிம நாணயங்களை (கிரிப்டோகரன்சி பிட்காயின்) அனுப்புவதற்கு மக்களை ஏமாற்ற இந்த முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் கணக்குகளின் பட்டியல் ஜோ பிடென், பராக் ஒபாமா, உபெர், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், பிட்காயின் சிறப்பு நிறுவனங்கள் என நீடித்தது.

#TamilSchoolmychoice

பெரும்பாலான இடுகைகள், உயர்மட்ட கணக்குகளின் வரிசையில் இருந்து நீக்கப்பட்டன.

தங்களுக்கு 30 நிமிடங்கள் இருப்பதாகக் கூறி, 1,000 அமெரிக்க டாலர் (4,250 ரிங்கிட்) பிட்காயினில் அனுப்புவதற்கு இரு மடங்கு திருப்பி அனுப்பப்படும் என்று அது கூறியிருந்தது.

“இது ஒரு ஏமாற்று வித்தை, பங்கேற்க வேண்டாம்!” ஜெமினி கிரிப்டோகரன்சி செலாவணி இணை நிறுவனர் கேமரூன் விங்க்லேவோஸ் தனது டுவிட்டரில் எச்சரித்தார்.

“மற்ற முக்கிய கிரிப்டோ டுவிட்டர் கணக்குகள் அனுபவிக்கும் அதே தாக்குதல் இதுதான். விழிப்புடன் இருங்கள்!”

டுவிட்டர் நிலைமையை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. விரைவில் ஓர் அறிக்கையை வழங்கும் என்றும் அது கூறியது.