Home One Line P1 பூமிபுத்ரா அந்தஸ்தைப் பெறுவதில் ஊழல், அரசு ஊழியர்கள் கைது!

பூமிபுத்ரா அந்தஸ்தைப் பெறுவதில் ஊழல், அரசு ஊழியர்கள் கைது!

378
0
SHARE
Ad

புத்ராஜெயா: நிதி அமைச்சகத்தில் புதிய கணக்குகளை பதிவு செய்த ஊழல் வழக்கு தொடர்பாக ஐந்து அரசு ஊழியர்கள் உட்பட 9 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பூமிபுத்ரா அந்தஸ்தைப் பெற நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்க பணம் பெற்றதாகவும் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி ஆறு நாட்கள் அவர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்.

#TamilSchoolmychoice

நீதிபதி ஷா விரா அப்துல் ஹாலீம் அவர்களை தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தார்.

30 முதல் 47 வயதுடைய ஒன்பது பேரும் நிதி அமைச்சகத்துடன் புதிய கணக்குகளின் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கும்பல் பூமிபுத்ரா நிலைக்கான விண்ணப்பங்களை இயக்குவதாக நம்பப்படுகிறது.

கட்டணம் செலுத்தப்படவுடன், இந்த கும்பல் அதிகாரப்பூர்வ நடைமுறைகளை மேற்கொள்ளாமல், 24 மணி நேரத்திற்குள் விண்ணப்பங்களை அங்கீகரிக்கும்.

ஒரு நிறுவனத்திற்கு 500 ரிங்கிட் முதல் 3,500 ரிங்கிட் வரை இந்த கும்பல் தங்கள் சேவைகளுக்கு கட்டணம் வசூலித்துள்ளது.

இவர்கள் 2017 முதல் செயல்பட்டு வருகிறார்கள். இதன் மூலமாக நூறாயிரக்கணக்கான ரிங்கிட்டுகளை அவர்கள் சேகரித்ததாக எம்ஏசிசி வட்டாரங்கள் நம்புகின்றன.

ஒன்பது பேரும் வியாழக்கிழமை (ஜூலை 16) கோலாலம்பூர், புத்ராஜெயாவில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.