Home One Line P2 ‘செல்லம்மா’: சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் பாடுகிறார்!

‘செல்லம்மா’: சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் பாடுகிறார்!

773
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சில வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்து இரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

தற்போது, அவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் இரண்டு படங்களும் முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அவர் அயலான், டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்தின் இறுதி அட்டவணை கோவாவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக, இப்படத்தின் முதல் பாடல் ‘செல்லம்மா’, வரிகளுடன் வெளியிடப்பட்டது.

அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை இயற்றியுள்ளார். அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி இணைப்பில் இப்பாடலைக் காணலாம்: