Home One Line P1 ஆகஸ்டு 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது!

ஆகஸ்டு 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது!

535
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஆகஸ்டு 1 முதல், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.

இது குறித்து தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இக்கட்டளைக்கு இணங்க மறுக்கும் நபர்களுக்கு எதிராக, சட்டம் 342 (தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988)- இன் கீழ் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இந்த முடிவு இன்றைய அமைச்சர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.