Home One Line P1 எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பு

எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பு

687
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடாகப் பயன்படுத்திய ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அதில், 67 வயதான நஜிப், 7 ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டில் குற்றவாளி என்று நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தீர்பளித்தார்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் 1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமாகும். இது தற்போது நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ளது.

#TamilSchoolmychoice

இன்று காலை 6.30 மணி முதல் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் நஜிப்பின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூடி இருந்தனர்.

 

(மேலும் தகவல்கள் தொடரும்)