Home One Line P1 கொவிட்19: ஐவர் உள்நாட்டில் தொற்றுக் கண்டுள்ளனர்

கொவிட்19: ஐவர் உள்நாட்டில் தொற்றுக் கண்டுள்ளனர்

380
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,956-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 13 சம்பவங்களில் 8 பேர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள் ஆவர். உள்நாட்டில் ஐவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இன்று ஐவர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,612 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 220 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ஒருவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அதிகமான தொற்று எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுவரும் நிலையில், நேற்று திடீரென பாதிப்பு எண்ணிக்கை 39-ஆக உயர்ந்தது.

ஒருவேளை நாட்டில் தொற்று எண்ணிக்கை மூன்று இலக்க எண்ணை அடைந்தால், நாட்டில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்படும் என்று அண்மையில் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்திருந்தார்.