Home One Line P1 ‘நான் சபா செல்வேன், துரோகிகள் தண்டிக்கப்பட வேண்டும்!’- துன் மகாதீர்

‘நான் சபா செல்வேன், துரோகிகள் தண்டிக்கப்பட வேண்டும்!’- துன் மகாதீர்

429
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபா தேர்தலின் போது தாம் அங்கு செல்ல இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அரசுக்கு துரோகம் இழைத்ததால், முதல்வர் சட்டமன்றத்தைக் கலைக்கும் சூழல் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“நான் சபா செல்வேன். அங்கு நடந்தது ஊழலின் கோர முகம்.

#TamilSchoolmychoice

“13 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன். இதைதான் நாம்  ஒழிக்க வேண்டும்

“அவர்கள் சபா மக்களால் நிராகரிக்கப்படுவார்கள். இவர்கள் பணத்தை நோக்கி செல்பவர்கள், கொள்கைகளை அல்ல. பணம் கிடைத்தால், இவர்கள் கட்சித் தாவுவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், ஊழலை எதிர்த்துப் போராடியர்கள்தான் இம்முறை ஊழலை வழங்க திட்டமிட்டுள்ளனர் என்று யாரையும் பெயர் குறிப்பிடாமல் மகாதீர் குறிப்பிட்டார்.

“வருத்தம் என்னவென்றால், இதற்கு முன்னர் ஊழலை ஒழிக்க பொராடியவர்கள், இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். ” என்று அவர் கூறினார்.