Home One Line P1 கொவிட்19: கெடாவில் மீண்டும் 3 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: கெடாவில் மீண்டும் 3 சம்பவங்கள் பதிவு

400
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,023-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட சம்பவங்களில் 15 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். மேலும், அறுவர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டவர்கள். அவர்களில், மூவர் கெடாவில் தொற்றுக் கண்டுள்ளனர். ஒருவர் சபா மற்றும் ஜோகூரில் தொற்றுக் கண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இன்று 18 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,702 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 196 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் இருவர் அவசரப் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.