Home One Line P2 மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமனம்

மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமனம்

863
0
SHARE
Ad

கொழும்பு – நடந்து முடிந்த இலங்கைப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை அதிபராக இருப்பவர் அவரது சொந்த சகோதரர் கோத்தாபாய ராஜபக்சே  ஆவார்.

“மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக பணிவுடன் நன்றி தெரிவிக்கிறேன். என்மீது வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை, நாட்டுக்காக சேவை செய்ய என்னை ஊக்குவிக்கிறது” என ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

ராஜபக்சா சார்ந்துள்ள இலங்கை மக்கள் முன்னணி கட்சி, வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களைச் செய்வதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளது.

அக்கட்சி 225 தொகுதிகளில் 145 தொகுதிகளையும், அதன் கூட்டணிகள் மேலும் ஐந்து தொகுதிகளையும் வென்றுள்ளன.

அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய ராஜபக்சே குடும்பம் இலங்கை அரசியலில் இரண்டு தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ராஜபக்சே முன்பு 2005 முதல் 2015 வரை அதிபராக இருந்தார்.

கொவிட்19 தொற்றுநோயையும் மீறி தேர்தலை நடத்திய சில நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.