Home One Line P1 கொவிட்19 தொற்றினால் கெடாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன

கொவிட்19 தொற்றினால் கெடாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன

461
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: கெடாவில் கொவிட்19 சம்பவங்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் மாநில அரசு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அது தெரிவித்தது.

தாவார், பாலிங், கோலா முடா, சாலா மற்றும் யானில் உள்ள பல இடங்களில் உள்ள உணவகங்களில் இனி உணவருந்த வாடிக்கையாளர்களை அனுமதிக்க மாட்டோம் என்று மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் கூறினார்.

அதற்கு பதிலாக, அங்குள்ள உணவகங்களுக்கு உணவுகளை விநியோகிக்கும் சேவைகளை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இரவு சந்தைக்கான நேரம் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுப்படுத்தப்படும் என்றும், மளிகை சாமான்கள், சலவை கடைகள், 24 மணி நேர மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் உள்ள கடைகள் ஆகியவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் சனுசி கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொது பூங்காக்களும் மூடப்படும்.

“நேர்மறையான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும்.

“அரசாங்க நிறுவனங்கள் மற்றும் துறைகள் உள்ளிட்ட சமூக திட்டங்கள் ஒத்திவைக்கப்படும் என்றும் நாங்கள் முடிவு செய்தோம்.

“திருமணங்கள் உட்பட எந்த விதமான கொண்டாட்ட விழாக்களும் நிறுத்தப்பட வேண்டும்.

“கொவிட்19 சம்பவங்கள் உள்ள எந்த மசூதிகள் அல்லது வழிபாட்டுத் தலங்களும் உடனடியாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகின்றன. மேலும் அவை கண்காணிக்கப்பட வேண்டும்” என்று சனுசி கூறினார்.

இரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில், மாநில அளவிலான தேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் அடங்கும்.

இதுவரை, கெடாவில் சிவகங்கா, தாவார், முடா மற்றும் சாலா ஆகிய நான்கு தொற்றுக் குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.