Home One Line P1 கொவிட்19: 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கொவிட்19: 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

388
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,219-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 சம்பவங்களில் 4 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். மேலும், 3 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். கெடாவில் தாவார் மற்றும் சாலா தொற்றுக் குழுவில் மூன்று பேர் தொற்றுக் கண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

கெடாவில் தற்போது, சிவகங்கா தொற்றுக் குழு உட்பட, நான்கு புதிய தொற்றுக் குழுக்கள் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று 26 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,902 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 192 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இருவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.