Home One Line P1 ‘தேர்தல் நடக்குமா ? முடிவை நீதிமன்றத்திடம் விட்டுவிடுகிறேன்’ – ஷாபி அப்டால்

‘தேர்தல் நடக்குமா ? முடிவை நீதிமன்றத்திடம் விட்டுவிடுகிறேன்’ – ஷாபி அப்டால்

490
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை அறிவித்த போதிலும், சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான நீதிமன்ற மறுஆய்வு குறித்து கேட்டபோது, ​​முதல்வர் ஷாபி அப்டால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இது அவர்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று அவர் கூறினார்.

“இதேபோல், நீதிமன்றத்திற்கும் அதிகார வரம்புகளும் உள்ளன,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

அது எதுவாக இருந்தாலும், தனது கட்சி வாரிசான் மற்றும் கூட்டணி கட்சிகள் இன்னும் மாநிலத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளன என்று அவர் கூறினார்.

“சபாவில் அரசியல், தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை தீர்மானிக்க இது எங்களுக்கு முக்கியம்” என்று அவர் மேலும் கூறினார்.

தேர்தல் ஆணையம் செப்டம்பர் 26 -ஐ வாக்களிக்கும் தேதியாக நிர்ணயித்தது. வேட்பு மனு மற்றும் முன்கூட்டிய வாக்களிப்பு தேதி முறையே செப்டம்பர் 12 மற்றும் 22 ஆக அது நிர்ணயித்தது.

இதனிடையே, கோத்தா கினபாலு உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 21- ஆம் தேதி சட்டமன்றம் கலைக்கப்பட்டதற்கான சவாலை நீதிமன்றத்தில் விசாரிக்கலாமா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யும்.