Home One Line P2 மீனவர் சுட்டுக் கொலை- வியட்நாம் தரப்பு விசாரணைக் கோருகிறது

மீனவர் சுட்டுக் கொலை- வியட்நாம் தரப்பு விசாரணைக் கோருகிறது

546
0
SHARE
Ad

ஹனோய்: ஞாயிற்றுக்கிழமை கிளந்தான் கடல் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது, அமலாக்கப் பிரிவின் கப்பலை மோதவும், முரட்டுத்தனமாக நடக்க முற்பட்ட வியட்நாமின் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து மலேசியா விசாரிக்க வேண்டும் என்று வியட்நாம் வெளியுறவு அமைச்சகம் கோரியுள்ளது.

மலேசிய கடலில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு வியட்நாமிய மீன்பிடி படகுகள் மற்றும் 20 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக மலேசியா விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று வியட்நாம் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு து ஹாங் தெரிவித்தார்.

இந்த வழக்கைப் பற்றிய கூடுதல் விவரங்களை அதிகாரிகளிடமிருந்து பெறவும், மீனவர்களுடன் தூதரக கூட்டங்களை ஏற்பாடு செய்யவும் மலேசியாவில் உள்ள வியட்நாமிய தூதரகத்திற்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, நாட்டின் நீர் எல்லைக்குள் நுழைந்த 2 வியட்நாமிய மீன்பிடி படகுகளில் ஒன்றின் மீது, கிளந்தான் கடல் அமலாக்கத் துறை (ஏபிஎம்எம்) துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாகத் தெரிவித்திருந்தது.

பாதுகாப்புப் படையினர் மீது டீசல் குண்டை வீசி மோத முற்பட்ட வெளிநாட்டினர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் வியட்நாமிய மீனவரை சுட்டுக் கொன்றது குறித்து கிளந்தான் கடல் அமலாக்கத் துறை இயக்குனர் முகமட் நோ சியாம் அஸ்மாவி யாகோப் கூறுகையில், வெளிநாட்டு மீனவர் அமலாக்க அதிகாரிகள் மீது முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டதாகக் கூறியிருந்தார்.

படகில் எரியும் இரப்பரை வீசி அதிகாரிகளுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் நடந்துக் கொண்டனர் என்று அவர் கூறினார்.

“அமலாக்கப் பிரிவினர் எச்சரிக்கையை விடுத்த போதும், வெளிநாட்டு மீனவர்கள் சரணடைய மறுத்துவிட்டனர். அதற்கு பதிலாக அமலாக்கப் பிரிவினர் படகில் மோதியதன் மூலம் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இதன் விளைவாக ஓர் அதிகாரி தன்னை தற்காத்துக் கொள்ள படகில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்,” என்று நேற்று அவர் கூறியிருந்தார்.

இந்த சம்பவத்திற்கு முன்னர், தேசிய அமலாக்க அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று கண்காணிப்பை மேற்கொண்டனர். பிற்பகல் 3.30 மணியளவில் தோக் பாலி கரையிலிருந்து 81 கடல் மைல் தொலைவில் நாட்டின் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த மீனவர் உட்பட 19 மீனவர்களை ஏற்றிச் சென்ற 2 படகுகளைக் கண்டறிந்தது.

30 வயது வியட்நாமிய மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பாசீர் பூதேயில் உள்ள தெங்கு அனிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சம்பந்தப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி படகுகளைப் பின்தொடர்ந்து தடுத்து வைக்க அமலாக்கப் பிரிவினர் உறுப்பினர்கள் குழுவை அனுப்பியது.

அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், வெளிநாட்டு மீனவர் சரணடைந்தனர். அதே நேரத்தில் படகு மற்றும் மொத்தம் சுமார் 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தோக் பாலியில் உள்ள கடல்சார் தலைமையகத்திற்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டது.