Home One Line P1 கொவிட்19: புதிதாக 23 பேர் பாதிப்பு

கொவிட்19: புதிதாக 23 பேர் பாதிப்பு

786
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் இன்று 23 புதிய கொவிட் 19 சம்பவங்களை பதிவு செய்துள்ளது. இதில் 13 உள்ளூர் நோய்த்தொற்றுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட 10 சம்பவங்கள் அடங்கும்.

சபாவில் மட்டும் 13 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் 10 பேர் உள்ளூர் மக்களை சம்பந்தப்பட்டது.

புதிய சம்பவங்களைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 9,969 சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

6 பேர் இன்று வெளியேற்றப்பட்டனர். மொத்தமாக 9,209 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 632 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 14 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.